சினிமா செய்திகள்
மருத்துவமனை செட்டை கொரோனா நோயாளிகளுக்காக கொடுத்த பிரபாஸ் படக்குழுவினர்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கையில் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் என்ற படத்திற்காக மருத்துவமனை செட் ஒன்று போடப்பட்டது. இந்த செட்டில் 50 படுக்கைகள் பிபிஈ கிட், மருத்துவ உபகரணங்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை ஒரிஜினலாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்த பின் அந்த செட்டை பிரிக்கத் தயாராக இருந்தபோதும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று படக்குழுவினரை தொடர்பு கொண்டு தங்கள் மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் எனவே மருத்துவமனை செட்டில் உள்ள பொருட்களை கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதனை அடுத்து படுக்கை இல்லாமல் சிரமப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைத்துள்ளது. திரைப்படத்திற்காக செட்டுக்களை போலியாக போடாமல் ஒரிஜினல் ஆகவே படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட செட் போடப்பட்டதன் காரணமாக தற்போது அவை நோயாளிகளுக்கு உதவிகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ராதேஷ்யாம் படக்குழுவினர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.