தமிழ்நாடு

நயன்தாரா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராதாரவி!

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்த ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தால் உடனடியாக மகளிர் சங்கம் மற்றும் திரையுலகினர் ராதாரவிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை அடுத்து ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அதிமுகவில் சேர முயற்சி செய்த ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் பாஜக வேட்பாளர்களுக்காக புதுவை தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய ராதாரவி கூறியதாவது: ’நான் நயன்தாராவை தவறாக பேசி விட்டதாக கூறி என் மேல் பழி சுமத்தி திமுக என்னை வெளியேற்றிவிட்டது. நயன்தாரா குறித்து அவதூறாக எதுவும் நான் பேசவில்லை அப்படியே பேசி இருந்தாலும், நயன்தாரா என்ன திமுக கொள்கை பரப்புச் செயலாளரா? அவரை பேசினால் திமுகவுக்கு என்ன வந்தது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் இருக்கும் ஏதாவது உறவு இருக்கும் என்றும், அதைப் பற்றி நான் பேசவில்லை என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version