Connect with us

தமிழ்நாடு

பரவும் கொரோனா: மக்களுக்கு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணனின் ஒரே கோரிக்கை

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், மாநில மக்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் பதற்றப்படக் கூடாது. இந்த நேரத்திலும் குறிப்பிட வேண்டியது இறப்பு விகிதம் 1.35% என்று மிகவும் குறைந்துள்ளது. முதலில் நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது 45 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். நமக்குத் தொற்று வராது, கூட்டத்தில் முகக்கவசம் இல்லாமல் சென்றாலும் எனக்கு கொரோனா வராது என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

சங்கிலி என்பார்கள், நம் கண்ணுக்குத் தெரியாமல் பரவும் கிருமி அது. அதை உடைக்க வேண்டும் என்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் மூலமாகத்தான் உடைக்க முடியும். பதற்றப்பட வேண்டாம். நமக்கு அருமையான மருத்துவ முறை உள்ளது. சென்னை, கோவை போன்ற இடங்களில் பொதுமக்கள் அவர்களாகத் தேர்வு செய்யும் மருத்துவமனைக்குச் செல்வதால் அதற்கு வழிகாட்ட டிஎம்எஸ், டிடிஎச்சில் கட்டுப்பாட்டறை அமைத்துள்ளோம்.

பொதுமக்கள் இந்த நேரத்தில் எண்ணிக்கையைப் பார்த்துப் பதற்றமடைந்து அதே நேரத்தில் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது. ஒருவருக்கு வந்தால் 10 பேருக்கு வந்துவிடுகிறது. அந்தச் சங்கிலியை உடைக்க வேண்டும். நேற்று 75,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இன்று 1 லட்சம் பேர் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுடைய ரிப்போர்ட் 2 லட்சம் பேர் ஒரு நாளைக்குப் போடவேண்டும் என்பதே. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

author avatar
seithichurul
சினிமா6 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்7 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்7 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!