டிவி

‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!

Published

on

சித்தி 2 சீரியலில் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு ராதிகாவே பதில் அளித்துள்ளார்.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ராதிகா சரத்குமாரின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சித்தி 2 நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. முழு நேர அரசியலில் கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து ஈடுபட உள்ளதாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சித்தி 2 சீரியலில் மட்டுமிருந்து இல்லாது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்தே மொத்தமாக விலகிக் கொள்வதாக ராதிகா அறிவித்தார். அடுத்து முன்னணியில் இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்து காணப்பட்டது.

இதற்கு தற்போது ராதிகாவே பதில் அளித்துள்ளார். ராதிகா கூறுகையில், “நான் சித்தி 2 சீரியல்ல நடிச்சிட்டிருந்த ரோல்-ல யார் யாரோ நடிக்கப் போறாங்கன்னு செய்தி படிச்சேன். அதெல்லாம் பார்த்த போது சிரிப்புதான் வந்துச்சு. நாட்டுல எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. சீரியல் தொடர்பா பரப்பப்படுற செய்தியெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்.

சித்தி 2 சீரியல்ல இனிமே என் கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டாங்க. என் கதாபாத்திரம் அப்படியே மறைஞ்சிடும். இளம் நடிகர்களின் கதாபாத்திரங்களின் அடிப்படையில் கதை நகரும். தேர்தல் முடிஞ்சப்பறம் சீரியல் என்னுடைய தேவை இருக்குன்னு சொன்னா அத அப்போ பாத்துக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version