இந்தியா

அரசு வேலையை விட்டு விடுங்கள் இல்லையேல் செத்துவிடுவீர்கள்.. காஷ்மீரிக்களை எச்சரிக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன்!

Published

on

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீரில் உள்ளவர்கள் அரசு வேலை வாய்ப்பினை விட்டு விடுங்கள். இலை என்றால் உங்கள் உயிரை இழந்து விடுவீர்கள் என்று வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜம்மு & காஷ்மீர் காவல் துறை, இந்திய இராணுவம், பிற பாதுகாப்புத் துறைகள் மற்றும் மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் காஷ்மீரிக்கள் 4 நாட்களில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளது.

தங்களது இந்த எச்சரிக்கையினை மீறி அரசு நிறுவனங்களில் காஷ்மீரிக்கள் பணிபுரிந்த வந்தால் அவர்களைக் குடும்பத்துடன் கொன்றுவிடுவோம் என்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் மிரட்டியுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version