உலகம்

அடுத்த என்ன நடக்கும்.. மீண்டும் வந்த சிபிஐ இயக்குனர்.. தூசு தட்டப்படும் ரபேல் பேரம்!

Published

on

சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்குகிறார்.

கடந்த இரண்டு மாதமாக நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

முக்கியமாக, இந்த ரபேல் விவகாரத்தை விசாரிப்பது கொள்கை முடிவு கிடையாது. அதனால் ரபேல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட அலோக் வெர்மாவிற்கு முழு தகுதி உள்ளது. ஆனால் இவரின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் முடிவதால், இவர் ரபேல் குறித்து நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version