தமிழ்நாடு
வினாத்தாள் கசிவில் தொடர்புடைய ஆசிரியர்கள் டிஸ்மிஸ்?
வினாத்தாள்கள் கசிவு விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர்பு இருந்தால் அந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கேள்வி தாள்கள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடைபெறவிருந்த தேர்வுகளின் வினாத்தாள் மட்டுமின்றி இன்று நடைபெறவிருந்த தேர்வுகளின் வினாத்தாள்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை விசாரணை செய்துவரும் நிலையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் மூலம் தான் இந்த வினாத்தாள்கள் கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக 2 பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் முடிவு செய்துள்ளன. மேலும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.