விளையாட்டு
வெண்கலப் பதக்கம் வென்று சரித்தர சாதனைப் படைத்தார் பி.வி.சிந்து!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சரித்தர சாதனைப் படைத்துள்ளார் பி.வி.சிந்து.
பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் முன்னதாக தோல்வியைத் தழுவியிருந்தார் சிந்து. இதைத் தொடர்ந்து இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை அவர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு பதக்கங்களை வெல்லும் இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண்மணி என்கிற சாதனையைப் படைத்து உள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. சிந்துவின் வெற்றிக்கு முன்னர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா, ஒரேயொரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றிருந்தது. தற்போது பதக்கப் பட்டியல் அதிகரித்து உள்ளது.
மகளிர் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கெத்துக் காட்டியுள்ளார்.