பிற விளையாட்டுகள்

டோக்கியோ ஒலிம்பிக்: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!

Published

on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து இன்று பிவி சிந்து உலகின் நம்பர்-1 பேட்மிண்டன் வீராங்கனையான சீனாவின் தாய் சூ யிங் என்ற வீராங்கனை உடன் மோதினார்

இந்த போட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி நிலையில் பிவி சிந்து முதல் செட்டை 18-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இதனையடுத்து அடுத்த சுற்றிலும் 12-21 என்ற் புள்ளிக்கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்ததால் சீன வீராங்கனை தாய் சூ யிங் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். பிவி சிந்துவின் தோல்வியால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இருப்பினும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிவி சிந்து வெற்றி பெற்றால் அவருக்கு வெண்கலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதிப் போட்டி வரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வெற்றி நடை போட்டு வந்த பிவி சிந்து அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் இந்தியாவிற்காக அவர் அரையிறுதி வரை போராடி வெற்றிகளை குவித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version