பிற விளையாட்டுகள்

தன் மீது கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என குறிப்பிட்டேன்.. பிவி சிந்து விளக்கம்!

Published

on

சர்வதேச பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை, தன் மீதான கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என்று குறிப்பிட்டேன் என பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம், டென்மார்க்கில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்கவில்லை.

அது குறித்து இன்று பி.வி.சிந்து வெளியிட்ட செய்தியில், கோவிட்-19 காரணமாக டென்மார்க் பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

இவரது இந்த டிவிட்டர் பதிவால், பி.வி.சிந்து பேட்மிட்டன் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் என்று செய்திகள் பரவின.

தற்போது அவரது டிவிட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்த பி.வி.சிந்து, கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என்று குறிப்பிட்டேன். சர்வதேச பேட்மிட்டன் போட்டியிலிருந்து நான் விலகவில்லை.

அடுத்து வர இருக்கும் ஆசிய பேட்மிட்டன் போட்டியில் கண்டிப்பாக நான் விளையாடுவேன் என்று பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்று, கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version