தமிழ்நாடு

20 தொகுதிகளில் போட்டி: புதிய தமிழகம் கட்சி அதிரடி அறிவிப்பு!

Published

on

புதிய தமிழகம் கட்சி சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தது. இதனால் அந்த கட்சி பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அவை, மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் கவுரவமான இடங்களை ஒதுக்க முன்வரும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவேளை இந்த இரண்டும் நிறைவேறாவிட்டால், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழும் தென்காசி, நெல்லை உள்பட 20 மக்களவை தொகுதிகளிலும், ஒட்டப்பிடாரம் உள்பட 12 சட்டப்பேரவை தொகுகளிலும் அரசியல் இயக்கங்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version