தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் கூட்டணியில் போட்டியா? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

Published

on

விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் சிலர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் ஒரு சில வேட்பாளர்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடைபெறும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவுபடி தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.

எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள், அனைத்து மாவட்ட தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய நகர பகுதி தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சென்று, நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version