சினிமா செய்திகள்

ஓடிடியில் ‘புஷ்பா’ ரிலீஸ் ஆகும் தேதி இதுவா?

Published

on

ஓடிடியில் ‘புஷ்பா’ ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவான ‘புஷ்பா’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் சமீபத்தில் வெளியானது என்பது உலகம் முழுவதும் இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த படத்தில் சமந்தாவின் ஐட்டம் பாடல் இடம்பெற்றதை அடுத்து இந்த படத்தின் வெற்றிக்கு அந்த பாடல் மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘புஷ்பா’ திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்துள்ளனர். அமேசான் ஓடிடியில் புஷ்பா திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் முதல் கட்டமாக அமேசானில் புஷ்பா திரைப்படம் ஒளிபரப்பு உள்ளதாகவும் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version