ஆன்மீகம்
கோடி புண்ணியங்களை தரும் புரட்டாசி மாதம் – இந்த விரதங்களை கடைபிடிக்க வேண்டியது எப்படி?
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான, புண்ணியம் தரும் மாதம் புரட்டாசி மாதமாகும். இந்த மாதம், பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து வணங்கினால், ஏராளமான புண்ணிய பலன்களைப் பெறலாம்.
பொதுவாக, ஒரு மாதத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே சிறப்பானதாக கருதப்படும், ஆனால் புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு நாளும் புண்ணியத்திற்கான சிறப்புடன் கூடியதாகும். சூரிய பகவான் கன்னி ராசியில் பயணிக்கும் இந்த மாதம், பெருமாளை வணங்குவதற்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது.
முழு மாதம் விரதம் இருக்க இயலாதவர்களுக்கு, சனிக்கிழமைகளில் மட்டும் பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால், ஏகாதசி விரதம் இருப்பதற்கான புண்ணியமும், புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலனும் கிடைக்கும்.
இந்த வருடத்தின் புரட்டாசி மாதம் எப்போது வருகிறது, அதன் சிறப்புகள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.