கிரிக்கெட்

டாஸ் வென்றது பஞ்சாப்: மூன்று தோல்விகளுக்கு பின் இன்று வெற்றி கிடைக்குமா?

Published

on

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ள நிலையில் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணியின் பேட்டிங்கில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் எடுக்கும் என்பதும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் எடுக்கும் என்பது குறிப்பிடதக்கது

பஞ்சாப் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றி பெற்ற அணிக்கு ஆறுதல் வெற்றி ஆக இருக்கும் என்றும் பஞ்சாப் அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது

இன்றைய போட்டியில் விளையாடும் அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்

பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக்கான், ஹென்ரிக்ஸ், ஃபேஇயன் அலன், ஷமி, ரவி பிஸ்னோய், அர்தீப் சிங்,

seithichurul

Trending

Exit mobile version