Connect with us

இந்தியா

கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா?

Published

on

மதுவிலக்கு அமல்படுத்தும் மாநிலங்களில் எல்லாம் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடியதாகவும் ஒருசிலர் காய்ச்சும் கள்ளச்சாராயம் விஷச் சாராயம் ஆக மாறி பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மாநில முதல்வர் ஒருவர் கள்ளச் சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை என உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராய வழக்கில் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டால் மரண தண்டனை விதிக்கும் மாநில கலால் சட்டத்தை திருத்த பஞ்சாப் மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், குருதாஸ்பூர் போன்ற மாவட்டங்களில் கடந்த ஆண்டு மட்டும் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இதனை அடுத்தே விஷ சாராய சாவுகளை தடுக்கும் வகையில் அதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பஞ்சாப் மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார். இதன்படி விஷ சாராய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மாநில கலால் சட்டத்தை திருத்த அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. இந்த சட்டத்திற்கு பின் உயிரிழப்புகள் குறையும் என்றும் தூக்கு தண்டனைக்கு பயந்து விஷ சாராயம் அவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தூக்கு தண்டனை விதிக்க முடியாத நிலை ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபில் உள்ள முக்கிய மூன்று நகரங்களில் கடந்த ஆண்டில் மட்டும் 111 பேர் விஷச் சாராயம் குடித்து பலியாகியுள்ளதை அடுத்து இந்த அவசர சட்டத்தை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!