இந்தியா

மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Published

on

தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாநில அரசுகள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனால் அம்மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படுகின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 2500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 38 பேர் பலியானதாகவும் தகவல்கள் வந்துள்ளன. முதல் கட்ட நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 31ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுகள் நடக்கும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பஞ்சாப் மாநில கல்வி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சில இடங்களில் அபராதம் விதிக்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version