இந்தியா
மகளிருக்கு மாதம் ரூ.1000: பஞ்சாப் முதல்வரின் முதல் கையெழுத்தா?
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரில் பதவியேற்கவுள்ளதாக அறிவித்திருந்தார்
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் தேர்தலின் போது பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அளித்திருந்த நிலையில் அவற்றில் முக்கியமானதாக மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது
இன்னும் ஓரிரு நாளில் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்ற உடன் அவர் கையெழுத்திடவுள்ள முதல் கையெழுத்து மாதம்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்ற திட்டத்திற்காக இருக்கும் என்று கூறப்படுகிறது
மேலும் தேர்தல் வாக்குறுதியாக மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்பட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் படிப்படியாக நிறைவேற்ற ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே பல கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிலையில் அந்த கடனை மீட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்க சரியான திட்டம் தீட்டப்படும் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.