சினிமா
புனித் ராஜ்குமாரால் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது – மருத்துவர்கள் நெகிழ்ச்சி…
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது.
நடிகர் புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் மட்டுமல்ல, பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்திருக்கிறார். குறிப்பாக 45 இலவச பள்ளிக்கூடங்களை அவர் நடத்தி வந்தார். 1800 மாணவ மாணவிகளுக்கான கல்விக்கட்டணத்தை அவர் செலுத்தி வந்துள்ளார்.
அதேபோல் 26 அனாதை இல்லங்களை மற்றும் 16 முதியோர் இல்லங்களை அவர் நடத்தி வந்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கெல்லாம் மேலாக தனது இறப்புக்கு பின் தனது கண்களையும் அவர் தானம் செய்துள்ளார்.
அவர் மரணமடைந்த நிலையில் அவரின் கண்கல் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது பார்வை திறனை பிரித்து 4 பார்வை பிரச்சனை இருந்த 4 பேருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது என மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
உயிரோடு இருக்கும் போது பல சமூக சேவைகளில் ஈடுபட்ட புனித் ராஜ்குமார், தனது மரணத்திற்கு பின்னரும் 4 பேருக்கு பார்வை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.