செய்திகள்

திருப்பதி கோயிலில் 18 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் அணிந்து வழிபட்ட புனே குடும்பம்!

Published

on

திருப்பதி கோயிலில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து வழிபட்ட புனே குடும்பம்!

திருப்பதி பாலாஜி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருவது வழக்கம். இதில், மகாராஷ்டிராவில் இருந்து வரும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். சமீபத்தில் புனேவைச் சேர்ந்த ஒரு குடும்பம், திருப்பதி கோயிலில் தங்க நகைகளை அணிந்து சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், 4 பேர் கொண்ட குடும்பம் 18 கோடி ரூபாய் மதிப்புடைய 25 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் குடும்பத்தில் இருந்த இரண்டு ஆண்கள் மிகப் பெரிய தங்கச் செயின்களையும், தங்கக் கண்ணாடியையும் அணிந்திருந்தனர். அவர்களுடன் வந்த பெண் தங்க ஜரிகை சேலை அணிந்திருந்தார். சிறுவன் ஒருவனும் உடன் இருந்தார்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, “வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது, திருப்பதிக்கு வந்த பக்தர்களின் மொத்த காணிக்கையாகும் 125 கோடி ரூபாய்க்கு மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Poovizhi

Trending

Exit mobile version