தமிழ்நாடு
ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவிகளை நீக்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு!
ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பழனிச்சாமியும் நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு கொடுத்துள்ளார். மேலும் அதிமுக சட்ட விதிகளில் ஓபிஎஸ் இபிஎஸ் கொண்டுவந்த திருத்தங்களில் செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, சமீபத்தில் தேர்தல் நடைபெற்றபோது, திமுக உள்பட மற்ற காட்சிகளில் திமுக உள்பட மற்ற கட்சிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை எந்த நேர்காணலும் நடத்தவில்லை. ஒரு சில மணிநேரங்கள் பொதுக்குழு மட்டும் கூட்டிவிட்டு அதனை அடுத்த சில மணிநேரங்களில் கூட்டத்தை முடித்து விட்டு அவர்களாகவே வேட்பாளர் பட்டியலை அறிவித்து கொண்டார்கள்.
ஆட்சிமன்ற குழுவில் கூட்டப்படுவதே இல்லை. அதுதான் வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டும். சில முக்கியமான எடுக்க ஆட்சிமன்ற குழு கூட்டம் படவேண்டும். நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் அதிமுகவில் அது நடக்கவே இல்லை. தான்தோன்றித்தனமாக எடப்பாடி பழனிசாமி என்ற இணை ஒருங்கிணைப்பாளரும், அவருக்கு ஒத்துப் போகின்ற ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் எடுக்கின்ற முடிவுகள் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உதாரணத்துக்கு நேற்று அன்வர்ராஜா நீக்கப்பட்டதும், என்னை நீக்கியதற்கும் எந்த காரணமும் இல்லை. ந்த காரணமும் இன்றி யாரை வேண்டுமானாலும் கட்சியிலிருந்து நீக்கி விடுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது’ என புகழேந்தி தெரிவித்துள்ளார்.