தமிழ்நாடு

நண்பர் தங்க தமிழ்செல்வன் சென்ற இடத்தில் விஸ்வாசத்தோடு இருக்க வேண்டும்: புகழேந்தி அறிவுரை!

Published

on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனோடு ஏற்பட்ட மோதலால் திமுகவில் இணைந்துள்ளார் தங்க தமிழ்செல்வன். இந்நிலையில் அவர் அங்காவது நன்றியோடு, விஸ்வாசத்தோடு இருக்க வேண்டுமென அமமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்செல்வன். இது தொடர்பாக அமமுகவின் புகழேந்தி கூறுகையில், அமமுகவில் தங்க தமிழ்செல்வன் நடந்துகொண்டதைப்போல, திமுகவில் நடந்து கொள்ள முடியாது. எனது நண்பர் தங்க தமிழ்செல்வன் சென்ற இடத்தில் நன்றியோடு விஸ்வாசத்தோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாளை திமுக ஒரு தோல்வியை சந்தித்தால், அங்கிருந்து ஜம்ப் பண்ணி போய்விடக்கூடாது. அமமுக தோல்வி என்றதும் இங்கிருந்து போனார். நாளை அங்கு தோல்வி என்றால் அங்கிருந்து செல்வாரா? என கேள்வி எழுப்பினார். தங்க தமிழ்செல்வன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெரிந்துவிட்டது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version