தமிழ்நாடு

போலீஸ் வலைவீசி தேடிய ரவுடி புதுவை பெண், புதுமைப்பெண் போல் பாஜகவில் இணைந்தார்!

Published

on

புதுச்சேரியில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் தாதா, பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. பிரபல தாதாவான இவர், பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக புகார்கள் உள்ளன. மேலும் கொலை மிரட்டல், மாமூல் வசூல் செய்தல், நில அபகரிப்பு, சொத்து அபகரிப்பு, ஆயுத பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் சபாநாயகர் விஎம் சிவக்குமார் கொலை வழக்கிலும் தொடர்புடையராவர்.

இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த எழிலரசி, தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.  அவரை புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்பு, தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு, விருந்து கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே தமிழகத்தில் ரவுடிகள், தாதாக்கள் அனைவரும் பாஜகவிலும், திமுக, அதிமுகவில் இணைந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எழிலரசியும் பாஜகவில் இணைந்துள்ளார். இதே போல், கொலை குற்ற வழக்கு பதியப்பட்டவர்களும் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version