தமிழ்நாடு

9,10,11 வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை: புதுவை அரசு அறிவிப்பு

Published

on

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மே 31-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 9 10 11 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் மத்திய அரசு அறிவுறுத்தல் காரணமாகவும் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version