தமிழ்நாடு
டவுன்பஸ்ஸில் பயணம் செய்து பயணிகளின் குறைகளை கேட்ட ஆளுனர் தமிழிசை!
முதல்வர், ஆளுநர் என்றாலே பொதுமக்கள் அவர்களை நெருங்க முடியாது என்ற எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் டவுன்பஸ்சில் பயணிகளுடன் பயணிகளாக பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மேலும் பயணிகளிடமும் நடத்துனர் மட்டும் ஓட்டுநரிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஒரு சிலர் கூறிய குறைகளை மனுவாக கொண்டு வந்து கவர்னர் மாளிகைக்கு கொடுங்கள் என்றும், தேர்தல் முடிந்தவுடன் அவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.