தமிழ்நாடு

புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்திற்கு மேலும் ரூ.4 லட்சம்: சொந்த பணத்தை கொடுத்த அமைச்சர்

Published

on

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் தலையில் குண்டடிபட்டு புதுக்கோட்டை சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அமைச்சர் ஒருவர் தனது சொந்த பணத்தில் ரூபாய் நான்கு லட்சத்தை அந்த சிறுவனின் குடும்பத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை அருகே புகழேந்தி என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அருகிலுள்ள துப்பாக்கி பயிற்சி நிலையத்தில் வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக ஒரு குண்டு அந்த சிறுவனின் உடலில் பாய்ந்தது என்பதும் அந்த சிறுவன் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்திற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் ரகுபதி சார்பில் ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version