தமிழ்நாடு

ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்: புதுவை அரசு அறிவிப்பு

Published

on

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது மிக மிக வேகமாக ஒமிக்ரான் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் மிக மோசமாகி வருகிறது என்பதும் இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் தற்போது ஒமிக்ரான் பரவி விட்டதை அடுத்து அம்மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் புதுவை மாநில முதல்வர் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்த பின் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இதனால் புதுவை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுவையை அடுத்து தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சிலமணி நேரங்களில் வர வாய்ப்புள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version