தமிழ்நாடு

மாற்றப்படுகிறாரா கவர்னர்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Published

on

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை மாற்ற வேண்டும் என திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் புதுவை கவர்னர் விரைவில் மாற்றம் செய்ய அதிக வாய்ப்பு கூறப்படுகிறது.

நேற்று புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வைத்த தேனீர் விருந்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்ட போதிலும் காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புறக்கணித்தன. இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது எல்லாவற்றிலும் அரசியல் புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களின் கவர்னராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் வேலைப் பளுவைக் குறைப்பதற்காக புதுவை ஆளுநராக புதிய நபர் ஒருவர் நியமனம் செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதனால் புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக கவர்னர் மாற்ற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல் தற்போது புதுவை கவர்னரை மத்திய அரசு மாற்ற இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version