தமிழ்நாடு
புதுவை கல்லூரிகளை மூட ஆளுனர் தமிழிசை உத்தரவு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
சமீபத்தில் தமிழக அரசு கல்லூரிகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது என்பதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதுமட்டுமின்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் செயல்முறை தேர்வுகளையும் முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையிலும் கல்லூரிகளை மூட அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்படும் என்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து இன்று முதல் புதுவையிலும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை ஆளுநர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.