உலகம்

உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம்: பிரபல நிறுவனம் அறிவிப்பு!

Published

on

உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை செய்யலாம் என பிரபல நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று பப்ளிசிஸ் என்பதும் இந்த நிறுவனம் உலகில் உள்ள 100 நாடுகளில் கிளைகள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதும் அவ்வப்போது ஊழியர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு விருப்பத்தின் பேரில் மாற்றலாகி வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பப்ளிசிஸ் நிறுவனம் திடீரென ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளது. அதன்படி பப்ளிசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வருடத்திற்கு ஆறு ஆண்டுகள் உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.

பப்ளிசிஸ் நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் 100 நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் ஊழியர்கள் பணி புரியலாம் என்றும் இதன் மூலம் பல நாட்டு கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள உதவும் என்றும் அது மட்டுமின்றி பல நாடுகளை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பப்ளிசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version