தமிழ்நாடு

வரும் 16 ஆம் தேதி மெரினா செல்ல தடை.. ஏன்?

Published

on

கொரோனா பரவல் இருப்பதால், காணும் பொங்கலன்று மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக 16 ஆம் தேதி மெரினா கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. ஏற்கெனவே புத்தாண்டு அன்று மெரினா கடற்கரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மீண்டும் அதே போல, காணும் பொங்கலன்று மெரினா செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய நாளும், பிந்தைய நாளும் கடற்கரைக்கு வரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்தே வெளியே வரவேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மெரினாவைப் போலவே நீலாங்கரை, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version