இந்தியா

கேரளாவில் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு!

Published

on

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 10 2ஆ, வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இதனை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என கேரள அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த கேரள மாநில தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். இந்த நிலையில் தற்போது மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தி கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து மார்ச் 17 முதல் தொடங்கும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version