இந்தியா

தனியார் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்குப் போடப்பட்டு வந்தது.

மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கி வருகிறது. ஆனால் அனைத்து மக்களுக்கும் வந்த சேர கால தாமதமாகும். இப்போது கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டணம் செலுத்திப் போட்டுக்கொள்ளத் தயார் என்றால் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கட்டணம் செலுத்தி கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு, 45-ம் வயதுக்கும் அதிகமான நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version