தமிழ்நாடு

நம்ம ரெண்டு காரும் சொகுசு கார் தான்: மனைவியிடம் அறிவுரை கூறிய பப்ஜி மதன்!

Published

on

நம்மிடம் இருக்கும் இரண்டு கார்களும் சொகுசு கார்கள் தான் என்றும் சொகுசு கார்கள் இல்லை என்று வெளியே சொல்ல வேண்டாம் என்றும் மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

யூடியூபில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக ஜூன் மாதம் 18 ஆம் தேதி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் இன்று மதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய மனைவி கிருத்திகா மற்றும் மதன் பெற்றோர்களும் அவரை சந்திக்க வந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தான் விளையாடவில்லை என்றும் சீன செயலிக்கு தான் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கொரியன் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படவில்லை என்றும் அதனைத்தான் விளையாடி பதிவு செய்தோம் என்றும், எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை என்றும் தான் செய்தது தவறாக இருந்தால் சாதாரண சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் மதன் மற்றும் அவருடைய மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து மீண்டும் இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து மதனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது சில நிமிடங்கள் கிருத்திகாவும் மதனும் பேசிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் அதன் பின் தனது மனைவியிடம் மதன், ’நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களும் சொகுசு கார்கள் தான் என்றும் எங்களிடம் சொகுசுக்கார்கள் இல்லை என்று வெளியே சொல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த இரண்டு கார்களையும் வழக்கறிஞர் உதவியுடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சிக்கவும் என்றும் மனைவியிடம் மதன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version