தமிழ்நாடு

ஜக்கியை வம்படியாக இழுத்து கிண்டல் செய்யும் அமைச்சர் பி.டி.ஆர் – வேற லெவல் வைரல்!

Published

on

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

குறிப்பாக ஜக்கி வாசுதேவ், சட்டத்தை மீறி நிறைய காரியங்களை செய்து வரும் நபர் என்றும், அவர் விரைவில் சட்டத்தின் பேரால் தண்டிக்கப்படுவார் என்றும் பகிரங்கமாக அறிவித்தார் பி.டி.ஆர். இதைத் தொடர்ந்து அவருக்கும் ஈஷா மையத்துக்கும் தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

பிரச்சனைகள் முற்றியதை அடுத்து, நான் ஆதாரங்களுடன் ஜக்கியை அம்பலப்படுத்துவேன் என்று சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் பி.டி.ஆர்.

இந்நிலையில் ஜக்கியின் பழைய ட்விட்டர் போஸ்ட் ஒன்றை மீள் பதிவு செய்து கிண்டல் செய்துள்ளார் பி.டி.ஆர். பழைய பதிவில் ஜக்கி, ‘இந்து என்பது ஒரு நிலம் சார்ந்த அடையாளம். ஆப்ரிக்காவில் உள்ள ஒரு யானை ஆப்ரிக்கன் என்று எப்படி அழைக்கப்படுகிறதோ, அப்படி இந்த நிலப் பகுதியில் இருக்கும் ஒரு மண் புழு கூட இந்து என்று தான் அழைக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பி.டி.ஆர் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, ‘தனக்கு ஒரு சிறப்பான அறிவு இருப்பது போல காட்டிக் கொள்ளும் நபர்’ என்று ஜக்கியை சூசகமாக கிண்டல் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version