தமிழ்நாடு

திடீரென ராஜினாமா செய்த பிடிஆர் பழனிவேல்: அவருக்கு பதில் யார் தெரியுமா?

Published

on

தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வரும் பிடிஆர் பழனிவேல் அவர்கள் திமுகவின் முக்கிய பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக வேறொருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழக நிதி அமைச்சராக செயல்பட்டுவரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக திமுகவின் ஐடி விங் தலைவராகவும் செயல்பட்டு வந்தார் என்பதும் அவரது தலைமையில் திமுகவின் ஐடிவிங் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு திமுகவின் ஐடிவிங் சரியாக செயல்படவில்லை என திமுக மேலிடம் கருதுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திமுகவின் ஐடிவிங் தலைவராக செயல்பட்டு வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ஐடிவிங் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக டிஆர்பி ராஜா அவர்கள் அந்த பதவியை ஏற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version