தமிழ்நாடு

கட்டிப்பிடித்து நலம் விசாரித்த பிடிஆர்-ஐ நல்லா பண்றீங்க தம்பி என பாராட்டிய மு.க.அழகிரி!

Published

on

திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டது பேசுபொருளாகியுள்ளது. மு.க.அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

எஸ்.ஆர் கோபி ஒரு காலத்தில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இவர் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அமைச்சர் பிடிஆர் ஆதரவாளராக உள்ளார். இந்நிலையில் அவரது மகள் திருமணம் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறுவதாக இருந்தநிலையில், உதயநிதியால் திருமணத்துக்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து அமைச்சர் பிடிஆர் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த திருமணத்துக்கு அமைச்சர் பிடிஆர் வந்த சிறிது நேரத்தில் மு.க.அழகிரி திருமண மண்டபத்துக்கு வந்தார். அப்போது அழகிரியை பார்த்ததும் அமைச்சர் பிடிஆர் அவர் அருகே சென்று கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து அழகிரியும் அவரை நலம் விசாரித்து நீங்க நல்லா பண்றீங்க தம்பி என்று பிடிஆரை பாராட்டினார்.

சமீபத்தில் மதுரைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசிபெற்றார். இந்நிலையில் தற்போது பிடிஆர்-அழகிரி சந்திப்பு திமுக வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version