இந்தியா
இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்!
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.
19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கவுண்ட்-டவுன் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
அமேசோனியா -1 உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் இந்த ராக்கெட்,
சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை சரியாக 10.24 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் முதன்முதலாக வணிக ரீதியில் இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.