சினிமா செய்திகள்

சிம்பு தொடர்ந்த வழக்கு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published

on

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கோடி கேட்டு மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்களை சுமார் மூன்று ஆண்டுகளாக தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சிம்பு நடித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ திரைப்படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தின் பாக்கியை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இருந்து வசூல் செய்து தர வேண்டும் என சிம்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஆனால் இந்த படத்தில் தனக்கு இழப்பு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரவேண்டும் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தரப்பும் வழக்கு தொடுத்தது.

இதனை அடுத்து மைக்கேல் ராயப்பன் தன் மீது அவதூறு பரப்புவதாக கோரி சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர், விஷாலை எதிர் மனுதாரராக சிம்பு சேர்த்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

Trending

Exit mobile version