சினிமா செய்திகள்

ரஜினியை விட இருமடங்கு சம்பளம்: யாஷூக்கு பிரபல தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்த தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றி காரணமாக ரஜினியை விட இருமடங்கு சம்பளம் கொடுக்க முன்வந்த தயாரிப்பாளர் ஒருவர் குறித்த தகவல் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அவர் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. அதற்கு அடுத்து விஜய் அஜித் ஆகியோர் சுமார் 60 முதல் 80 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் .

இந்த நிலையில் யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இதனை அடுத்து அவருடைய சம்பளமும் பல மடங்கு கூடி உள்ளதாக தெரிகிறது .

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்களது நிறுவனத்தின் படத்தில் யாஷ் நடிக்க ஒப்புக்கொண்டால் ரூபாய் 200 கோடி சம்பளம் தரத் தயார் என்று கூறியிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கேஜி திரைப்படத்திற்கு முன் யாஷ் வாங்கிய சம்பளம் வெறும் ஐந்து கோடி என்ற நிலையில் தற்போது அவரது சம்பளம் 25 முதல் 50 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் 200 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளதால் திரையுலகினர் விலை பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு யாஷ் கால்ஷீட் தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version