சினிமா செய்திகள்

லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லை- அஜித் மீது தயாரிப்பாளர் புகார்..!

Published

on

லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லை என ‘தல’ அஜித் மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

‘தல’ அஜித் கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக அந்தத் தயாரிப்பாளர் புகார் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறுகையில், “கடந்த 1996-ம் ஆண்டு அப்பா- அம்மாவை சிங்கப்பூருக்கு அனுப்ப பண உதவி தேவைப்படுவதாக அஜித் என்னிடம் 6 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். அப்போது 6 லட்சம் ரூபாய்க்கான ட்ராஃப்ட் கொடுத்தேன்.

அதன் பின்னர் அவள் வருவாளா என்னும் திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தது. அந்த சமயம் அஜித்-க்கு 12 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் படம் நான் தயாரிக்கவில்லை என்று ஆன போது எனக்கு வேறு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக ஜித் கூறினார். அதன்படி நடித்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் எனக்குப் பெரிய அளவில் பணக்கஷ்டம் ஏற்பட்ட போது கொடுத்த பணத்தை அஜித்திடம் திருப்பிக் கேட்ட போது கடன் வாங்கவில்லை என மறுத்துவிட்டார்.

இன்று பல கோடி சம்பாதிக்கும் அஜித் எனக்கான பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும் எனப் பல முறை அணுகிவிட்டேன். ஆனால், அஜித் தரப்பிலிருந்து எனக்கு பதிலே வரவில்லை. நான் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version