சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்துக்கு வந்த புது சிக்கல்.. விஜய் சம்பளத்தைக் குறைப்பாரா?

Published

on

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்பட மாஸ்டர். ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வினியோகஸ்தர்கள் ஏற்கனவே மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்காக பெரும் தொகையை வழங்கிவிட்டனர்.

மறுபக்கம் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பெரும் தொகைக்கு நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. ஆனால் நாங்கள் திரை அரங்குகளில் தான் படத்தை வெளியிடுவோம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வினியோகஸ்தர்களோ மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டால், தற்போது இருக்கும் சூழலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. எனவே விஜய் அவர் சம்பளத்திலிருந்து ஒரு பாதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் சம்பளத்தை விட்டுக்கொடுத்தால், மாஸ்டர் படம் பொங்கலுக்குத் திரைக்கு வரும் இல்லை என்றால் இன்னும் தாமதம் ஆகலாம். அல்லது ஓடிடியில் கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான முடிவு எடுக்கும் பொறுப்பு இப்போது விஜய் கையில்தான் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version