சினிமா செய்திகள்

இன்னொரு அர்ச்சனா ஆகிவிடுவாரா பிரியங்கா: நெட்டிசன்கள் எரிச்சல்!

Published

on

கடந்த சீசனில் அர்ச்சனா பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்து நிலையில் இந்த சீசனில் பிரியங்கா தற்போது பார்வையாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கெட்ட பெயரை சேர்த்து வருவதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இரண்டு குரூப்புகள் உருவாக்கி விட்டதாக தெரிகிறது. இதில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் சிபி, அபினய், தாமரை மற்றும் அக்சரா ஆகியோர்கள் ஒரு குரூப்பாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரியங்கா திடீரென அக்ஷரா மீது குறிவைத்து அவரை தொடர்ச்சியாக குறை கூறி வருகிறார். நாமினேஷனில் கூட அவர் அக்சரா பெயரை தான் முதலில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அக்சரா மீது ஏன் பிரியங்காவுக்கு இவ்வளவு கோபம் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிரியங்கா தன்னை ஒரு பிக்பாஸ் போல நினைத்துக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அனைவரையும் எரிச்சலாக்கி வரும் அபிஷேக்கை அவர் தன்னுடன் இணைத்துக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இன்னொரு அர்ச்சனாவாக பிரியங்கா மாறி விடுவார்கள் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் தன்னை நெருப்பாக பார்ப்பதாகவும் தன்னை கைவிட்டு கால்விட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்தால் சுட்டு விடுவேன் என்றும் சிபி மிரட்டுகிறார். இதனை அடுத்து இமான் அண்ணாச்சியை தான் நெருப்பாக பார்ப்பதாக தாமரை கூற, அதனை அடுத்து அபிஷேக்கை இமான் அண்ணாச்சி குறை கூறுகிறார். அபிஷேக்கிடம் ஒரு குறை இருப்பதாகவும், கொளுத்திப் போடும் தன்மை அவரிடம் இருப்பதாகவும் அதனால் அபிஷேக்கை தான் நெருப்பாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதனை அடுத்து கேப்டன் சிபி, ‘நீங்கள் அபிஷேக் பற்றிப் பேசுவது எனக்கு தவறாகப் படுகிறது என்று கூறுவதுடன் இன்றைய புறமும் முடிவடைகிறது. இன்றைய நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஒரு சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version