சினிமா செய்திகள்

யோவ் பெருசு: பிக்பாஸை பங்கமாய் கலாய்த்த பிரியங்கா!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள் என்றும், அவரது கட்டளைக்கு உடனே அடிபணிவார்கள் என்றும், அவர் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் கூட பிக் பாஸ் மீது மரியாதை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனின் போட்டியாளராகிய பிரியங்கா சர்வசாதாரணமாக பிக்பாஸை கலாய்த்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய எபிசோடில் இமான் அண்ணாச்சி, பிரியங்காவிடம் பேசும்போது பிக்பாஸ் என்னுடைய ரூம் மேட் என்று கூறினார். அப்போது கேலியும் கிண்டலுமாக பிரியங்கா ’பிக்பாஸ்க்கு ஏன் ஒரு கண் மட்டும் இருக்கிறது, ஒழுங்கா ஐட்ராப்ஸ் போட சொல்லுங்க, யோவ் பெருசு ஒரு கண்ணை வைத்துகொண்டு எப்படியா இருக்க’ என்று கலாய்த்தார்.

மேலும் பிக்பாஸுக்கு பொண்டாட்டி இருக்கும் என்றும் அவர் பொண்டாட்டி ஐடிராப்ஸ் போட்டு விடுவார் என்றும் கூறியது நகைச்சுவையின் உச்சகட்டமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் அறந்தாங்கி நிஷா பிக் பாஸை காதலிப்பது போன்று கலாய்த்தார். ஆனால் இந்த சீசனில் பிரியங்கா நேரடியாகவே பிக்பாஸை பெருசு என கலாய்த்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிக்பாஸ் தரப்பிடம் இருந்து என்னவிதமான ரியாக்ஷன் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version