இந்தியா

ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்: பிரியங்கா காந்தி ஆவேசம்!

Published

on

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக அவர் வேட்டையாடப்படுகிறார் என ஆவேசமாக குரல் கொடுத்துள்ளார் பிரியங்கா காந்தி.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆனால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கூறியதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரது டெல்லி வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர் அங்கு இல்லாததால் வீட்டில் நோட்டீஸை ஒட்டிச்சென்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார். நாட்டிற்காக எப்போதுமே விசுவாசமாக பணியாற்றியவர் அவர். பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் ப.சிதம்பரம். அதற்காகவே இப்போது பழிவாங்கப்படுகிறார் என்றார்.

Trending

Exit mobile version