உலகம்
இதுதான் சரியான நேரம்.. பிரியங்காவை அழைத்ததன் காரணம் சொல்லும் ராகுல்!
டெல்லி: பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வருவது பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
புவனேஷ்வரில் நடந்த காங்கிரஸ் விழாவில் கலந்து கொண்ட போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை குறித்து பேசினார். அதில், பிரியங்கா அரசியலுக்கு வருவது 10 நாளைக்கு முன் முடிவு செய்யப்படவில்லை. பல வருடங்களுக்கு முன் இதை குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். அப்போதே அவர் அரசியலுக்கு வர வேண்டியது, என்றுள்ளார்.