இந்தியா

எங்கள் நாடு ஆபத்தில் உள்ளது, காப்பாற்றுங்கள்: அமெரிக்க அதிபருக்கு விஜய் பட நடிகை வேண்டுகோள்

Published

on

எங்கள் நாடு கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தில் உள்ளது, எனவே உடனடியாக எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என அமெரிக்க அதிபருக்கு விஜய் படத்தில் நடித்த நாயகி ஒருவர் வேண்டுகோள் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்.

விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகியான இவர் அதன்பின் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பிரியங்கா சோப்ரா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ’எங்கள் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா இந்தியாவிற்கு 550 மில்லியன் மதிப்புள்ள தடுப்பூசிகளை அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறியதற்கு நன்றி தெரிவித்த பிரியங்கா சோப்ரா, எங்கள் நாடு தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது என்றும், எனவே உடனடியாக இந்தியாவுக்கு தடுப்பூசி உள்பட முக்கிய மருந்துகளை அனுப்பி வையுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை அடுத்து இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்கா கூடுதலான உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் இந்த ட்விட்டுக்கு அவரது ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version