சினிமா
பிரியங்கா சோப்ராவுக்கே இப்படியொரு கொடுமை நடந்திருக்கா? பரபரக்கும் பாலிவுட்!
உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர், இந்தி பட வாய்ப்புகள் குவிய அங்கேயே முன்னணி நடிகையாக ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
ஆனால், சமீப காலமாக பாலிவுட் பக்கம் அவர் திரும்புவதே இல்லை. நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் படம் பண்ணினாலும், பாலிவுட்டில் தான் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஷாருக்கான் உடன் அவர் இணைந்து நடித்த பதான் திரைப்படம் 1000 கோடிக்கு அதிகமாக வசூல் ஈட்டியது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தான் ஏன் ஹாலிவுட் பக்கமே முழுதாக ஒதுங்கி விட்டேன் என்றும் பாலிவுட்டை ஏன் பிரிந்தேன் என்றும் வெளிநாட்டு டிவி நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றுக்கு அளித்துள்ள பதில், பாலிவுட் ரசிகர்களை பயங்கர ஷாக் ஆக்கி உள்ளது.
பாலிவுட்டில் தன்னை சிலர் திட்டமிட்டே கார்னர் செய்தனர் என்றும், தொடர்ந்து தன்னால் அவர்களை எதிர்த்து போராட முடியவில்லை என்றும் சினிமாவுக்குள் நடைபெற்ற பாலிடிக்ஸில் போட்டிப் போட்டு டயர்ட் ஆகி விட்டதால் தான் அப்படியே ஹாலிவுட் பக்கம் நகர்ந்து விட்டேன் என பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு கூட பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக பாலிவுட்டை அவரது ரசிகர்கள் தொடர்ந்து பாய்காட் செய்து வரும் நிலையில், பிரியங்கா சோப்ராவின் இந்த பேச்சு அப்படி பாலிவுட்டில் என்ன தான்ப்பா நடக்குது. யாரு இந்த மாதிரி கேவலமான வேலைகளை எல்லாம் செய்யுறாங்க, திறமையானவங்க நடிச்சிட்டு போகட்டுமே, பாலிவுட் பிரபலங்களின் வளர்ச்சிக்காக பிரியங்கா சோப்ராவையே பார்சல் பண்ணியிருக்கீங்களே என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிரியங்கா சோப்ரா வெளியேறிய பின்னர் தான் பாலிவுட்டில் நடிகை ஆலியா பட் முன்னணி நடிகையாக மாறினார் என்றும் சஞ்சய் லீலா பன்சாலி படம் எல்லாம் பிரியங்கா சோப்ரா இருந்திருந்தால் அவர் பக்கமே சென்றிருக்காது என்றும் கூறுகின்றனர்.