சினிமா செய்திகள்

பிரியங்காவை அடித்த தாமரை, திருப்பி அடித்த பிரியங்கா: ரணகளமாகிய பிக்பாஸ் வீடு!

Published

on

இன்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் பிரியங்காவை தாமரை அடிக்க, தாமரையே பிரியங்கா திருப்பி அடிக்க பிக்பாஸ் வீட்டில் ஒரே ரணகளம் ஆகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இந்த டாஸ்கில் வெற்றி பெற அனைத்து போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவரும் இந்த டிக்கெட்டை பெற தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டாஸ்க்கின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 10 முட்டைகள் கொடுக்கப்பட்டு அதை உடையாமல் பாதுகாத்து கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கில் ஒருவர் முட்டையை இன்னொருவர் உடைக்க இதில் பிரியங்கா மற்றும் தாமரை இடையே அடிதடி ஏற்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் தாமரை பிரியங்காவை அடிக்க, அதன்பின் தாமரையை பிரியங்கா திருப்பி அடிக்க ஒரே ரணகளம் ஆகி உள்ளது.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து பாவம் பிரியங்கா கூறும்போது, ‘நான் என்ன இளிச்சவாயா? இளிச்சவாய் என்று என் மண்டையில் எழுதி ஒட்டி இருக்கிறதா? என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன்’ என்று கூறும் ஆவேசமாக பாவனியிடம் கூறும் காட்சிகள் புரமோ வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தாமரை மற்றும் பிரியங்கா மீது பிக்பாஸ் நடவடிக்கை எடுப்பார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version