சினிமா செய்திகள்

கதறி அழுத சக போட்டியாளரை சிரிக்க வைத்த பிரியங்கா: குவியும் பாராட்டுக்கள்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய பிரியங்கா கதறி அழுது கொண்டிருந்த சக போட்டியாளர் ஒருவரை ஒரே நிமிடத்தில் சிரிக்க வைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒருவரான பவானி ரெட்டி தனது சக போட்டியாளர் மதுமிதாவிடம் தனது சோகக் கதையைக் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் அவர் கதையை கூறிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுதுவிட்டார்.

அப்போது அங்கு வந்த பிரியங்கா ’உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா? என்று கேட்க எனக்கு ஆந்திர சாப்பாடு வேண்டும் என்று பவானி ரெட்டி கூறினார். அப்போது பிரியங்கா இமான் அண்ணாச்சி ஆந்திர சாப்பாடு என்று ஒரு கேவலமாக சாப்பாடு செய்து வைத்திருக்கிறார், அதை சாப்பிட்டால் உனக்கு ஆந்திரா சாப்பாடு இனிமேல் வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிடுவாய் என்று கூறினார். இதனை அடுத்து பவானி ரெட்டி திடீரென சிரித்துவிட்டார்.

பிரியங்காவுக்கு இயல்பாகவே பிறரை சிரிக்க வைக்கும் திறமை உள்ளது என்றும் அவர் இந்த வீட்டில் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டது மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றும் நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version